மெட்ரோ ரயிலில் கட்டணத்தை குறைக்கக்கோரி மனு
tami nadu June 17, 2018,
சென்னை மெட்ரோ ரயில் கட்டணங்களை புறநகர் ரயில்கள் போல் நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பட்டாபிராமை சேர்ந்த எம்.ஜி.ஆர்.விஸ்வநாதன் என்பவர், புறநகர் மின்சார ரயில்களைப் போல மெட்ரோ ரயில்களுக்கும் குறைந்தது 5 ரூபாய் முதல் அதிகபட்சமாக 10 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்க கோரி இந்தப் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார்.
புறநகர் ரயில்களை விட 12 மடங்கு அதிகமாக 60 ரூபாய் வரை மெட்ரோ ரயில்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதிக கட்டணம் வசூலிப்பது மக்களின் பொருளாதார சூழலை பாதிப்பதாகவும் விஸ்வநாதன் தனது மனுவில் கூறியுள்ளார். மேலும் மெட்ரோ ரயில் சேவையை, இந்திய ரயில்வே ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> மெட்ரோ ரயிலில் கட்டணத்தை குறைக்கக்கோரி மனு