கணவனின் தலையில் அம்மிகல்லைப் போட்டு கொலை

கணவனின் தலையில் அம்மிகல்லைப் போட்டு கொலை

tami nadu

காஞ்சிபுரம் அருகே, குடும்பத் தகராறில், கணவன் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் கூலி தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள திருமுருகன் வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்துவிட்டு, மனைவி சுந்தரியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கமாக இருந்த்தாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த திருமுருகன், மனைவி சுந்தரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சுந்தரி வீட்டிலிருந்த அம்மி கல்லை கணவரின் தலையில் போட்டு உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த திருமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடம் சென்ற காஞ்சிபுரம் தாலுகா போலீசார், சுந்தரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> கணவனின் தலையில் அம்மிகல்லைப் போட்டு கொலை

Search

Back to Top