பள்ளத்தில் விழுந்த யானையை மீட்க தீவிர முயற்சி

பள்ளத்தில் விழுந்த யானையை மீட்க தீவிர முயற்சி

tami nadu

கூடலூர் அருகே ஊருக்குள் நுழைந்து கீழே விழுந்து எழுந்திருக்க முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் பெண் யானையை மீட்க வனத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். 

நீலகிரி மாவட்டம்  சேரம்பாடி படச்சேரி பகுதியில் பெண் யானை ஒன்று நேற்றிரவு ஊருக்குள் புகுந்தது. குடியிருப்புகள் அதிகம் உள்ள ஒரு பகுதிக்கு சென்ற யானை அங்கு சுவர் ஒன்றை உடைத்துக்கொண்டு சரிவான பகுதியில் விழுந்தது. இதனால் அதற்கு வாயில் காயம் ஏற்பட்டது. கீழே விழுந்த யானை எழுந்திருக்க முடியாமல் தவித்தது. இது குறித்து மக்கள் தகவல் அளித்ததையடுத்து வனத்துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து யானையை தூக்கி நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டனர். இந்த முயற்சி பலனளிக்காததால் யானையை கிரேன் உதவியுடன் மீட்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த யானை கடந்தவாரம் சேரம்பட்டி பகுதியில் மூதாட்டி ஒருவரை கொன்றதாக கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> பள்ளத்தில் விழுந்த யானையை மீட்க தீவிர முயற்சி

Search

Back to Top