தூத்துக்குடி செல்கிறார் ஆளுநர் புரோஹித்

தூத்துக்குடி செல்கிறார் ஆளுநர் புரோஹித்

tami nadu

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தூத்துக்குடி செல்கிறார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் , குடும்பத்தினக்கு ஆறுதல் கூற அவர் திட்டமிட்டுள்ளார். மேலும் காயமடைந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆளுநர் ஆறுதல் கூறவுள்ளார். 

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அவர் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் ஏற்கனவே நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்‌னர். இந்த நிலையில் ஆளுநரும் இன்று தூத்துக்குடிக்குச் செல்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> தூத்துக்குடி செல்கிறார் ஆளுநர் புரோஹித்

Search

Back to Top