காவிரி விவகாரம்: திமுக கூட்டணி இன்று மனிதச் சங்கிலி
tami nadu April 23, 2018,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் இன்று மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. புதுக்கோட்டையில் நடக்கும் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த ஒன்றாம் தேதி முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. முழு அடைப்பு போராட்டம், அதைத் தொடர்ந்து காவிரி மீட்புப் பயணம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்தடுத்த போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்று தமிழகம் முழுவதம் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.
மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஒரு மணி நேரம் வரை இப்போராட்டம் நடைபெறுகிறது. புதுக்கோட்டையில் நடைபெறும் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். தஞ்சையில் வைகோவும் சென்னையில் நடக்கும் போராட்டத்தில் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> காவிரி விவகாரம்: திமுக கூட்டணி இன்று மனிதச் சங்கிலி