பாஜக கொடி கம்பத்தில் ‘காலணி’
tami nadu March 26, 2018,
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி கொடி கம்பங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் காலணியை ஏற்றியதால் அந்த பகுதி பாஜகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வடதாரை காமராஜபுரம், மற்றும் டி.எஸ்.கார்னர் பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி கொடிக் கம்பங்களிலுள்ள கொடிகளை கீழே இறக்கிய அடையாளம் தெரியாத நபர்கள், காலணிகளையும், குப்பைகளையும் கொடிகளில் ஏற்றிச் சென்றுள்ளனர். இதை அறிந்து சம்ப இடத்துக்கு வந்த பாரதிய ஜனதா கட்சியினர் இந்த செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தாராபுரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். ஏற்கனவே 2 நாட்களுக்கு முன் தாராபுரம் அடுத்துள்ள குண்டடம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகம்பங்கள் உடைக்கப்பட்ட நிலையில் இன்று பாஜக கொடிக்கம்பங்களும் அவமதிக்கப்பட்டுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> பாஜக கொடி கம்பத்தில் ‘காலணி’