பள்ளி மாணவர்களுக்காக கொண்டு செல்லப்பட்ட கஞ்சா பறிமுதல்!

பள்ளி மாணவர்களுக்காக கொண்டு செல்லப்பட்ட கஞ்சா பறிமுதல்!

tami nadu

பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா கடத்திச் சென்ற முதியவரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழக-கேரள எல்லையை இணைக்கும் குமுளியில், போலீஸார் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது
சந்தேகத்திற்குரிய வகையில் வந்து கொண்டிருந்த முதியவரை போலீஸார் விசாரித்தனர். அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த கந்தன் (55) என்பது தெரியவந்தது. 

அத்துடன் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் பலருக்கு, கஞ்சா விற்பனை செய்ய கம்பத்தில் இருந்து கஞ்சா வாங்கி கடத்திச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 550 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட கந்தன் பீருமேடு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> பள்ளி மாணவர்களுக்காக கொண்டு செல்லப்பட்ட கஞ்சா பறிமுதல்!

Search

Back to Top