திருப்பதி அருகே தமிழக அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து: இருவர் பலி

திருப்பதி அருகே தமிழக அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து: இருவர் பலி

tami nadu

தமிழக அரசுப்பேருந்து, திருப்பதி அருகே விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உள்பட இருவர் உயிரிழந்தனர். 

சேலத்தில் இருந்து திருப்பதிக்கு ஏராளமான பயணிகளுடன் தமிழக அரசு பேருந்து புறப்பட்டது. இன்று காலை திருப்பதி அருகே உள்ளே பேரூர் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. சாலையோரத்தில் இருந்த கல்வெட்டு தடுப்புச்சுவரில் மோதி பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் வெங்கடாசலம், பெரம்பலூரை சேர்ந்த சுந்தர்ராஜ் இருவரும் பேருந்துக்கு அடியில் சிக்கியதில் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதில் சகபயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மாற்று பேருந்தில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து சந்திரகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> திருப்பதி அருகே தமிழக அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து: இருவர் பலி

Search

Back to Top