சென்னையில் பால் தட்டுப்பாடு அபாயம்!

சென்னையில் பால் தட்டுப்பாடு அபாயம்!

tami nadu

தமிழகத்தில் ஒட்டுமொத்த பால் உற்பத்தி 15% குறைந்துள்ளதால் வரும் கோடைகாலத்தில் சென்னையில் பால் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசின் பதிவுகளின் படி, மாநிலத்தில் மொத்தம் 1.98 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் நாளொன்றுக்கு ஒரு மாவட்டத்திற்கு தேவைப்படும் பாலின் அளவு 11-12 லட்சம் லிட்டர். தீவனம் மற்றும் கால்நடைகளின் பற்றாக்குறை காரணமாக வீழ்ச்சியடைந்து வரும் உற்பத்தி வீதத்தால், சென்னையிலும் ஒரு சில வாரங்களுக்குள் பால் விநியோக தட்டுப்பாடு ஏற்படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்களின் நலன் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.ஜி. ராஜேந்திரன் தெரிவித்தார்.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பான ஆவின்-ஐ (Aavin) தீவனம் மற்றும் அடர்த்தியான கால்நடை உணவை மானிய விலையில் வழங்கவும், தினசரி கொள்முதல் வீதத்தை அதிகரிக்கவும் இந்த சங்கம் விரும்புகிறது.

மேலும் அண்டை மாநிலமான கர்நாடகா அரசுக்குச் சொந்தமான நந்தினி பால் உற்பத்தி நிறுவனம், மொத்த உற்பத்தியில் 90%க்கும் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஆவின் வெறும் 15% மட்டுமே கொள்முதல் செய்கிறது. 17 பதிவு செய்யப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்களின் மூலம் ஆவின் கொள்முதல் 2016-17ஆம் ஆண்டில் 33 லட்சம் லிட்டர்களில் இருந்து இந்த வருட மார்ச் மாதம் வரை 27.5 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பால் உற்பத்தியாளர்கள் ரூ.33 முதல் 37 வரை ஒரு லிட்டர் பாலை உற்பத்தி செய்தனர். இது தீவனம் மற்றும் கால்நடை உணவு அதிகரித்ததன் காரணமாக இப்போது ரூ.40 முதல் 44 வரை உயர்ந்துள்ளது. அதாவது ஒரு கிலோவுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது.  
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> சென்னையில் பால் தட்டுப்பாடு அபாயம்!

Search

Back to Top