10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்
tami nadu March 16, 2018,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன.
ஏப்ரல்20ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 36 ஆயிரத்து 649 தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக 3 ஆயிரத்து 609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 186 கைதிகள் மற்றும் 5 திருநங்கைகளும் 10ஆம் வகுப்பை எழுதவுள்ளனர்.

இதற்காக புழல், திருச்சி, பாளையங்கோட்டை,கோவை மத்திய சிறைகளில் சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை கண்கணிக்க 6 ஆயிரத்து 900 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்