ஸ்மார்ட் கார்டு இல்லையா ? அப்போ நாளை முதல் ரேஷன் இல்லை!
tami nadu February 28, 2018,
ஸ்மார்ட் கார்டு இல்லையென்றால் நாளை முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தது. இதில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட சில ரேஷன் கார்டுகளில் பொதுமக்களின் புகைப்படங்களுக்கு பதிலாக, நடிகைகளின் படங்கள் அச்சிடப்பட்டு சர்ச்சை எழுந்தது. பின்னர் அந்தப் புகைப்படங்கள் மாற்றித் தரப்பட்டன. அத்துடன் மார்ச் ஒன்றாம் தேதிக்குள் ஸ்மார்ட் கார்டு பெறாதவர்களின், பழைய ரேஷன் கார்டுகள் போலி என நீக்கப்படும் என்றும், அதன்பிறகு புதிய ஸ்மார்ட் கார்டுகளுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஸ்மார்டு கார்டு இல்லை என்றால் நாளை முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என பொதுவிநியோகத்துறை, அனைத்து மாவட்ட வழங்கல் துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> ஸ்மார்ட் கார்டு இல்லையா ? அப்போ நாளை முதல் ரேஷன் இல்லை!