பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: முடங்கிய போக்குவரத்து!

பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: முடங்கிய போக்குவரத்து!

tami nadu

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் சென்னை திரும்புவதால் பல இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது. 

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் முடிந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு லட்சக்கணக்கான திரும்பி வருகின்றனர். இதற்காக மதுரை, கோவை, திருச்சி, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ‌இருந்து சென்னைக்கு சிறப்பு பே‌ருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் விடுமுறை முடிந்து இன்று வேலைநாள் தொடங்குவதால், சென்னை திரும்பும் அவசரத்தில் மக்கள் உள்ளனர். 

இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்துக் காவல்துறை தரப்பில் முன்னேற்பாடுகள் செய்திருந்தனர். இருப்பினும் சென்னை கோயம்பேடு மற்றும் அதை சுற்றிள்ள பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதுதவிர சென்னையின் பல முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மேலும் ரயில் நிலையங்களும் மக்களின் வருகையால் நிரம்பி வழிகின்றது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: முடங்கிய போக்குவரத்து!

Search

Back to Top