ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளுக்கு மோகினி அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளுக்கு மோகினி அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

tami nadu

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோயிலில் மோகினி அலங்காரத்தில் இருந்த நம்பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மூலஸ்தானத்திலிருந்து இன்று காலை 6 மணிக்கு நாச்சியார் திருக்கோலத்தில் நம்பெருமாள் புறப்பட்டு அர்ச்சனை மண்டபத்திற்கு சென்றார். நாளை வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சொர்க்கவாசல் எனும் பரமபத வாசல் நாளை காலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் 4,000 மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் திருச்சி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, ஸ்ரீரங்கம் வரும் நகர மற்றும் புறநகர் பேருந்துகளை நிறுத்த நகருக்கு வெளியே ஆங்காங்கே தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளுக்கு மோகினி அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

Search

Back to Top