பள்ளிக்கு அருகில் டாஸ்மாக்: மாணவர் நலனை பாதுகாக்க அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

பள்ளிக்கு அருகில் டாஸ்மாக்: மாணவர் நலனை பாதுகாக்க அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

tami nadu

டாஸ்மாக் கடைகள் திறக்கும் போது வருவாயை மட்டும் கணக்கில் கொள்ளாமல் மாணவர் நலனையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.‌

திருப்பூர் மாவட்டம் செட்டார்பாளையத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் பாதையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பழனிசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ரவிச்சந்திரபாபு அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பள்ளி கல்லூரிகளிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்தான் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் மாணவர்கள் கடந்து செல்வதை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைக்கு திரைசீலை அமைத்து மறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் பெங்களூருவில் குடிநீர் பாட்டில்களில் மாணவர்கள் மதுபானத்தை எடுத்து வந்தது கண்டறியப்பட்டதை சுட்டிகாட்டினார். மேலும் திரைப்போட்டு மறைத்தாலும் மாணவர்‌களின் கவனம் திசை திரும்பும் என நீதிபதிகள் கூறினர். அதோடு புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கும் போது மாணவர் சமுதாய நலனையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் உத்தரவிட்டனர். இந்த குறிப்பிட்ட கடையை மாவட்ட ஆட்சியர் ஒரு அதிகாரியை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என கூறினர். அதோடு இளைஞர் சமுதாய நலனை கருத்தில் கொண்டு ஆட்சியர் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> பள்ளிக்கு அருகில் டாஸ்மாக்: மாணவர் நலனை பாதுகாக்க அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

Search

Back to Top