சுனாமி பேரிடர் தடுப்பாக நடப்பட்ட மரங்கள் எங்கே?
tami nadu December 26, 2017,
வேதாரண்யம் கடலோரக் கிராமங்களில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி நினைவாக நடப்பட்ட இரண்டரை லட்சம் மரக்கன்றுகள் போதிய பராமரிப்பின்றி அழிந்துள்ளது.
2004 ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய சுனாமி நினைவாக நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர கிராமங்களில் நடப்பட்ட இரண்டரை லட்சம் மரக்கன்றுகள் போதிய பராமரிப்பின்றி அழிந்துள்ளன. சுனாமி பாதிப்பு போன்று மீண்டும் ஒருமுறை நடைபெறாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாலுவேதபதி, புஷ்பவனம் ஆகிய கடலோர கிராமங்களில் கடந்த 2005 ஆம் ஆண்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. 24 மணி நேரத்திற்கு இரண்டு லட்சத்து 64 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு கின்னஸ் சாதனையும் படைக்கப்பட்டது.
புஷ்பவனம் கிராமத்தில் நடப்பட்ட அந்த மரங்கள் இருந்த சுவடே தெரியாத அளவுக்கு சமூக விரோதிகளால் தற்போது வெட்டப்பட்டுள்ளன. அந்த இடத்தில் நினைவு கல்வெட்டு மட்டுமே எஞ்சி நிற்கிறது. பேரிடர் தடுப்பாக நடப்பட்ட மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் மீண்டும் மரம் நட்டு உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> சுனாமி பேரிடர் தடுப்பாக நடப்பட்ட மரங்கள் எங்கே?