அரசியல் நிலைப்பாடு பற்றி 31-ம் தேதி அறிவிப்பேன்: ரஜினி
tami nadu December 26, 2017,
’எனது அரசியல் நிலைப்பாடு பற்றி வரும் 31-ம் தேதி அறிவிப்பேன்’ என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இரண்டாவது கட்டமாக இன்று முதல் சந்திக்கிறார். ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நோக்கில் நடைபெறும் இந்தச் சந்திப்பு, வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்று காலை ராகவேந்திரா கல்யாண மண்டபத்துக்கு வந்த ரஜினியுடன் தயாரிப்பளர் கலைஞானம், இயக்குனர் மகேந்திரன் ஆகியோரும் உடனிருந்தனர்.
பின்னர் ரஜினிகாந்த் பேசும்போது, ‘நான் எனது பிறந்த நாளன்னைக்கு ரசிகர்களை சந்திக்கலை. ஏன்னா இந்த வாட்டி தனியா இருக்கணும்னு நினைச்சேன். நிறைய ரசிகர்கள் வீட்டுக்கு வந்திருக்காங்க. அவங்கள சந்திக்க முடியலை, ஸாரி.
அரசியல் விஷயமா நான் என்ன சொல்லப் போறேன் அப்படின்னு ஜனங்களுக்கு ஆர்வம் இருக்கோ, இல்லையோ, ஊடகங்களுக்கு ரொம்ப ஆர்வம். நான் அப்பவே என்ன சொல்லியிருக்கேன்னா, போர் வரும் போது பார்க்கலாம்னு சொன்னேன். போர்னு சொன்னா, தேர்தல்தானா? ஏன் இப்படி பில்டப் கொடுக்கிறாங்கன்னு சொல்றாங்க. எனக்கு அரசியல் புதுசில்ல. அதுல என்ன கஷ்ட நஷ்டங்கள், அழம் என்னன்னு தெரிஞ்சதாலதான் தயங்குகிறேன். தெரியல்லன்னா, ஓகேன்னு சொல்லி வந்திரலாம். யுத்தத்துக்குப் போனா, ஜெயிக்கணும். அதுக்கு வீரம் மட்டும் பத்தாது. வியூகம் வேணும். நான் 31-ம் தேதி என் அரசியல் நிலைப்பாடு பற்றி தெரிவிப்பேன். நான் அரசியலுக்கு வருவேன்னு சொல்லல்லை. என் நிலைப்பாட்டைதான் சொல்றேன்னு சொன்னேன்.
எப்பவும் சொல்ற மாதிரி கட்டுப்பாடு, ஒழுக்கம் அதுதான் முக்கியம். முதல்ல குடும்பம், தாய், தந்தை, குழந்தைகளை பார்த்துக்கோங்க. இப்ப சமூக வலைத்தளங்கள்ல நிறைய நெகட்டிவ் விஷயங்கள் வருது. அதை மனசுல ஏத்திக்காதீங்க. பாசிட்டிவாவே எடுத்துக்குங்க. அவனை இவன் கற்பழிச்சான், அப்பாவை மகன் கொன்னான் மாதிரி விஷயங்களை படிக்காதீங்க. பாசிட்டிவா திங் பண்ணுங்க. அது உங்க வாழ்க்கைக்கு நல்லா இருக்கும்’ என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> அரசியல் நிலைப்பாடு பற்றி 31-ம் தேதி அறிவிப்பேன்: ரஜினி