காஞ்சிபுரத்திற்கு கூடுதல் ஆம்புலன்ஸ் வழங்க கோரிக்கை
tami nadu December 11, 2017,

காஞ்சிபுரத்தில் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காமல் சிறுமி உயிரிழந்திருக்கும் நிலையில், கூடுதலாக ஆம்புலன்ஸ் வாகனங்களை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வழங்க வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீப காலமாக டெங்கு உள்ளிட்ட பிரச்னைகளால் 108 ஆம்புலன்ஸ்களுக்கு அழைப்புகள் அதிகமாக வருவதால் உடனடியாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை அரசு மருத்துவமனைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நோயாளிகளை உரிய நேரத்தில் அழைத்து செல்ல முடியவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உடனடியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: Pudhiya thalai murai
Read More >> காஞ்சிபுரத்திற்கு கூடுதல் ஆம்புலன்ஸ் வழங்க கோரிக்கை