அனுமதி பெறாமல் ஆர்.கே.நகருக்குகள் இயக்கப்பட்ட 12 கார்கள் பறிமுதல்

அனுமதி பெறாமல் ஆர்.கே.நகருக்குகள் இயக்கப்பட்ட 12 கார்கள் பறிமுதல்

tami nadu

தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் இயக்கப்பட்ட 12 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் ஒன்றாக, ஆர்.கே.நகருக்குள் முன் அனுமதி பெறாமல் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனுமதி பெறாமல் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் இயக்கப்பட்ட 12 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த நால்வரது வாகனங்கள், திமுகவைச் சேர்ந்த மூவரின் கார்கள், தினகரன் ஆதரவாளர்களின் 5 கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அனுமதி அட்டை இல்லாத வாகனங்களை ஆர்.கே.நகர் தொகுதிக்குள் அனுமதித்தால், சம்மந்தப்பட்ட தேர்தல் அலுவலர் மற்றும் பறக்கும்படையில் உள்ள காவலர்களை பணியிடைநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


Source: Pudhiya thalai murai
Read More >> அனுமதி பெறாமல் ஆர்.கே.நகருக்குகள் இயக்கப்பட்ட 12 கார்கள் பறிமுதல்

Search

Back to Top