பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக அதிகாரிகளுக்கு பயிற்சி
tami nadu December 9, 2017,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணைய அறிவிப்புகளை அதிகாரிகள் முறையாக பின்பற்ற வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவுறுத்தியுள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தல் பார்வையாளர்கள் தலைமையில், வாக்குச்சாவடிகளில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ள காவல்துறை உயர் அதிகாரிகளின் பயிற்சிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. பணப்பட்டுவாடாவை தடுப்பது, தேர்தல் செலவினங்களை கண்காணிப்பது ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், காவல்துறை கூடுதல் ஆணையர் ஜெயராமன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இந்தக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணைய நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: Pudhiya thalai murai
Read More >> பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக அதிகாரிகளுக்கு பயிற்சி