குற்றாலத்தில் குளிக்க இன்றும் தடை
tami nadu December 9, 2017,

குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெலலை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்றும் வெள்ளப்பெருக்கு குறையாததால் குளிக்கத்தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: Pudhiya thalai murai
Read More >> குற்றாலத்தில் குளிக்க இன்றும் தடை