ஜெட்லியுடன் வைகோ சந்திப்பு
BJP.finance minister arun jaitley, India, New delhi, vaiko March 28, 2017,
புதுடில்லி : டில்லி ஜந்தர்மந்திரில் தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று கலந்து கொண்டார். இதனையடுத்து இன்று காலை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை அவரது வீட்டிற்கு சென்று வைகோ சந்தித்துள்ளார். அப்போது, 13 வது நாளாக விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு விரைவில் தீர்வு காண வேண்டும். தமிழக வறட்சி நிவாரண பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைகோ வலியுறுத்தி உள்ளார்.Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.