காஷ்மீர் தீ விபத்து: குடிசை வீடுகள் எரிந்து நாசம்
burned house, India, jammu kashmir, srinagar, terrorist March 28, 2017,
ஸ்ரீநகர்:காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள சினார் பக்கில் சூன்டேகுல் குடிசை பகுதியில் நேற்று(மார்ச்-27) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல வீடுகள் எரிந்து நாசமடைந்தன. தீயை அணைப்பதற்காக போராடிய இரு வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.காற்று வேகமாக வீசியதால் பல குடிசைகள் உள்பட சில பெரிய வீடுகளும் எரிந்து சாம்பலாயின. விபத்து குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.