பாக். தேசிய தினம்: வாழ்த்து கடிதம் அனுப்பினார் மோடி

India, narendra modi, national day, New delhi, pakistan
புதுடில்லி: பாகிஸ்தானின் தேசிய தினம் இன்று ( 23-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி , பாக்.பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு கடிதம் மூலம் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் இந்திய குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது அப்போது இந்திய குடியரசு தினத்திற்கு தனது வாழ்த்து செய்தியை கடிதம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பினார் பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப்.

முன்னதாக பாக். தேசிய தினம் டில்லியில் உள்ள பாக். தூதரகத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் கலந்து கொண்டார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top