கவனமில்லாத காங்., மேலிடம்: கிருஷ்ணா
bangalore, congress, India, union minister krishna March 24, 2017,
பெங்களூரு: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கிருஷ்ணா கூறியதாவது: காங்கிரஸ் கட்சி அடிமட்டத்திலிருந்து மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால், தலைமை இதில் கவனம் செலுத்தவில்லை. காங்கிரசில், கட்சி தலைமைக்கும் அடி மட்ட தொண்டருக்கு தொடர்பில்லாமல் உள்ளது. கட்சியில் மரியாதையும், என்னிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என மட்டுமே எதிர்பார்த்தேன். எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை. ஊழலுக்கு எதிராக மோடி பொறுமை காட்டவில்லை. இது என்னை கவர்ந்தது. ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் என்னை கவர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.