'இரட்டை இலை கிடைக்காதது வருத்தம்!': பன்னீர்
ALADMK, chennai, O paneer selvam, tamil nadu March 24, 2017,சென்னை:’இரட்டை இலை சின்னம், எங்களுக்கு கிடைக்காமல் போனது, மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது’ என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அவரது அறிக்கை:
எம்.ஜி.ஆர்., உருவாக்கிய, ஜெயலலிதாவின் வெற்றி சின்னமான, இரட்டை இலையை, தேர்தல் கமிஷன் முடக்கி உள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வலுவான ஆதாரங்களை, தேர்தல் கமிஷனிடம் முன்வைத்தும், இரட்டை இலை சின்னம், எங்களுக்கு கிடைக்காமல் போனது, மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இரட்டை இலை சின்னத்தை, சட்டப்படி எப்பாடுபட்டாவது, மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
எம்.ஜி.ஆர்., – ஜெ., ஆகியோர் நல்லாசியுடன், கட்சியையும், ஆட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும், தமிழ் மக்களும், அ.தி.மு.க., தொண்டர்களும் மகிழும் வண்ணம் உறுதியாக மீட்டெடுப்போம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Source: G-News

Leave a comment
You must be logged in to post a comment.