அதிமுக தலைமையேற்பேன்; தீபா

ALADMK, chennai, deepa jayakumar, jayalalitha, tamil nadu
சென்னை: ஆர்.கே. நகரில் போட்டியிட ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.பின்னர் தீபா கூறியதாவது: ஆர். கே நகர் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மக்களின் அன்பே காரணம். மக்கள் நல்ல முடிவை அளிப்பார்கள். உண்மையான வாரிசு யார் என்பதையும் தெரிவிப்பார்கள். ஆர்.கே. நகருக்கு நிச்சயம் நல்ல தலைமை தேவைப்படுகிறது.

நிறைவேற்றுவேன்:


தேர்தல் முடிவுக்கு பின்னால் அதிமுக தலைமையேற்று அம்மா வழியில் கட்சியை கொண்டு செல்வேன் என நம்பிக்கையுள்ளது. 3 மாதமாக மக்கள் என்னை சந்தித்து வருகின்றனர் . முதலில் சந்தித்தவர்கள் ஆர்கே நகரை சேர்ந்தவர்கள். ஜெ., என்ன வாக்குறுதி அளித்தார்களோ அதனை நிறைவற்றுவேன். மக்கள் வாய்ப்பு அளித்த பின்னர் நிச்சயம் நிறைவேற்றுவேன். தேர்தல் ஆணையம் அளிக்கும் சின்னத்தில் போட்டியிடுவேன். உரியநேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அந்த நேரத்தில் தினகரன் திட்டமிட்டு வந்துள்ளார் எனது மாற்று வேட்பாளராக எனது உண்மையான தொண்டர் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top