ராகுல் ஒதுங்கி வழிவிட வேண்டும்: கேரள இளைஞர் காங்., யோசனை
congress, India, kerala, rahul gandhi, thiruvananthapuram, youth congress March 22, 2017,
திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்று நடத்த ராகுல்காந்தி விரும்பவில்லை என்றால், அவர் மற்றவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்க வேண்டும் என்று கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் மகேஷ் கூறி உள்ளார்..
இது குறித்து மகேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில், ‛மதிப்பிற்குரிய ராகுல்காந்தி அவர்களே, மிகப் பெரிய இயக்கமான காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்று நடத்த தாங்கள் விரும்பாவிட்டால், மற்றவர்களுக்கு வழிவிட்டு, ஒதுங்கி விடுங்கள்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காங்கிரஸ் மேலிடத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரான ஏ.கே. அந்தோணி வெளிப்படையாக கூற வேண்டும் என மகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார். காங்கிரஸ் புதுப்பொலிவுடன் மேலெழுந்து வருவதற்கு நாங்கள் எங்கள் உயிரைக் கூட தரத் தயாராக உள்ளோம் என்று கூறி உள்ள அவர், கட்சியில் அதற்கான மரியாதை கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.