போலீஸ் ஸ்டேஷன் மரணங்கள்: மகாராஷ்டிராவில் அதிகம்

death, India, maharashtra, New delhi, police station
புது டில்லி: போலீஸ் ஸ்டேஷன் மரணங்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் தான் அதிகமாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் இன்று(மார்ச்-21) கேள்வி நேரத்தின் போது கிரண் ரிஜிஜூ கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது கூறியதாவது: பிற மாநிலங்களை ஒப்பிடும்போது மகாராஷ்டிராவில் போலீஸ் ஸ்டேஷன் மரணங்கள் அதிகமாக உள்ளன. அவர் அளித்த புள்ளிவிபரத்தின் படி, 2013ம் ஆண்டு 35 பேரும், 2014ம் ஆண்டு 21 பேரும், 2015ம் ஆண்டில் 19 பேரும் மரணமடைந்துள்ளனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் இது அதிகம் என கூறப்பட்டிருந்தது.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top