ஓ.பி.எஸ்.,க்கு பாதுகாப்பு கேட்டு மனு

India, New delhi, O paneer selvam, Rajnath Singh
புதுடில்லி: ஓ.பி.எஸ்., அணியினர் டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினர்.
இதன்பின்னர் ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் கூறுகையில், ஓ.பி.எஸ்.,க்கு தொடர்ந்து மிரட்டல் அதிகரித்து வருகிறது. ஓ.பி.எஸ்., மதுசூதனனுக்கு சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு கேட்டு மனு அளித்தோம். உளவுத்துறை மூலம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக ராஜ்நாத் கூறினார். ஓ.பி.எஸ்., கையை வெட்டுவென் என ஒருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top