பிரசவ கால விடுப்பை 26 வாரமாக உயர்த்தும் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்
26 week period, India, lok sabha, maternity leave, New delhi March 10, 2017,
புதுடில்லி: பெண்களின் பிரசவ கால விடுப்பை 26 வாரமாக உயர்த்தும் சட்ட மசோதா பார்லி., லோக் சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
அரசு, தனியார் மற்றும் பொதுத்துறைகளில் பணியாற்றும் பெண்கள் தங்கள் முதல் இரு குழந்தைகளுக்கான பிரசவ காலத்திற்காக 12 வாரங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த பிரசவ கால விடுப்பை அதிகரிக்க செய்ய எழுந்த கோரிக்கையை அடுத்து 12 வாரமாக இருந்த விடுமுறை 26 வாரமாக மாற்றியமைக்கப்பட்டது.
லோக்சபாவில் நிறைவேற்றம்:
இந்த சட்ட திருத்தம் கடந்த டிசம்பர் மாதம் நடந்த பார்லி., கூட்ட தொடரின் போது ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று நடந்த லோக்சபாவில் இந்த தீர்மானத்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டா தத்தாத்ரேயா கொண்ஐ வந்தார். மன்ற உறுப்பினர்களின் விவாத்திற்கு பின் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டம் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டுள்ள நிறுவனத்திற்கு பொருந்தும், இதனால் நாட்டில் உள் ள 18 லட்சம் பெண் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.