ஆர்.கே.நகரில் போட்டி: ஞாயிறன்று முடிவு- மாபா.,

chennai, M.P.pandiyanrajan, R.K.nagar, tamil nadu
சென்னை: வீனஸ் காலனியில் உள்ள ஓ.பி.எஸ்., வீட்டில் மாபா.பாண்டியராஜன் கூறியதாவது: உண்மையான அதிமுக என்பது ஓ.பி.எஸ்., தலைமையில் இயங்கும் இயக்கமேயாகும். சசிகலா மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் நல்ல முடிவை அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். சட்டசபையில் விதிமுறை மீறல் நடந்துள்ளது என மனுவில் குறிப்பிட்டுள்ளோம். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில் 26 விதிமீறல்கள் நடந்துள்ளது. ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து ஞயிற்றுக்கிழமை முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top