பினாமி ஆட்சி பேச்சை கேட்க வேண்டாம்: தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் அறிவுரை

chennai, dmk, election commission of india, MK stalin, tamil nadu
சென்னை: குற்றவாளியின் பினாமி ஆட்சி சொல்படி நடக்காமல், ஐகோர்ட் அறிவுரைப்படி மாநில தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் அறிக்கை: ஐகோர்ட் அறிவித்த கெடுவுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். குற்றவாளி பினாமி ஆட்சியின் சொல்படி நடக்காமல், ஐகோர்ட் அறிவுரைப்படி செயல்பட வேண்டும். தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான தன்னா
ட்சி பெற்ற அரசியல் சட்டஅமைப்பாகும். மாநில தேர்தல் ஆணையம், பினாமி ஆட்சி சொல் கேட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த தொடர்ந்து தயங்கிவருகிறது. ஜனநாயக தீபத்தை ஏற்றி கிராம சபைகளை வலுவாக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. பொறுப்புகளை உணர்ந்து கோர்ட் விதித்த கெடுவிற்குள் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English Summary:

Chennai: guilty, not the words of the proxy rule, the court must act on the advice of the State Election Commission DMK leader MK Stalin said act. 

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top