துப்பாக்கிச்சூடு: இலங்கை மன்னிப்பு கேட்க பொன்.ராதா வலியுறுத்தல்
federal government, hydrocarbon project, nagercoil, pon radha krishnan, tamil nadu March 7, 2017,
நாகர்கோவில்: மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: தமிழகத்தை, மத்திய அரசு எவ்வாறு புறக்கணித்தது என கூற வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பா.ஜ., அரசு கொண்டு வரவில்லை.
மீனவர் பிரச்னையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில் துப்பாக்கிசூடு சம்பவம் கண்டிக்கத்தக்கது. வருத்தத்திற்குரிய விஷயம். பேச்சவார்த்தை நடக்கும் நிலையில் துப்பாக்கிச்சூடு ஏன் நடத்தப்பட்டது. மீன்பிடிப்பது இரு நாட்டு தமிழ் மீனவர் பிரச்னை. தமிழக மீனவர்கள், இலங்கை பகுதியில் மீன்பிடிப்பதை அந்நாட்டு மீனவர்கள் எதிர்க்கின்றனர். துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்று சம்பவங்கள் தொடரக்கூடாது.
ஜெ., மரணம் தொடர்பாக ஏன் அறிக்கை வெளியிட்டனர் என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Nagercoil: pon interview with Minister of Tamil Nadu, was rejected by the federal government as to how to spell. BJP hydrocarbon project, the government has not come up with.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.