அப்பல்லோவில் நடந்ததை மத்திய, மாநில அரசுகள் விளக்க வேண்டும்: பன்னீர்
apollo hospital, chennai, death, jayalalitha, O paneer selvam, tamil nadu March 6, 2017,
சென்னை: அப்பல்லோவில் நடந்தை மத்திய மாநில அரசுகள் விளக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அவரது வீட்டில் அவரது ஆதரவு எம்.பி.,க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் பேசுகையில்: ‛‛சசிகலா அதிமுகவின் பொது செயலாளர் ஆனதிற்கு சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நான் நினைத்திருந்தால் மற்றொரு கூவத்தூரை ஏற்பாடு செய்திருப்பேன், அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. அப்பல்லோவில் நடந்ததை மத்திய மாநில அரசுகள் விளக்க வேண்டும்”என கூறினார்.
முன்னாள் அமைச்சர் செம்மலை: ‛‛ கீழே தள்ளி விடப்பட்டு மயக்கமடைந்ததாலேயே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மரணத்தில் உள்ள மர்மத்தை உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும்” என கூறினார்.
மா.பா. பாண்டியன்: ‛‛ ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும், அதிமுக வின் பொது செயலாளராக பன்னீர் செல்வம் வருவார்” என கூறினார்.
நத்தம் விஸ்வநாதன்: ‛‛ ஜெ., மரணத்தில் சாமானிய மக்களுக்கு சந்தேகம் உள்ளது” என கூறினார்.
பொன்னையன்: ஜெயலலிதாவை கீழே தள்ளிவிடப்பட்டதை பார்த்த பணிப்பெண்ணை காணவில்லை என கூறினார்.
English summary:
Chennai: Apollo walked to explain federal and state governments urged former Chief Panneerselvam.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.