பழனிசாமி முதல்வரானதற்கு ஸ்டாலின் காரணம் : தமிழிசை

BJP, kumbakonam, MK stalin, tamil nadu, tamilsai soundarajan
கும்பகோணம் : ஸ்டாலின் முறையாக நடந்திருந்தால் பழனிசாமி முதல்வர் ஆகி இருக்க முடியாது என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் தான் காரணம் :

கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, நெடுவாசல் போராட்டத்தை சில அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் தூண்டி விடுகின்றன. விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் பா.ஜ., அரசு கொண்டு வராது. கரும்பு நிலுவைத் தொகையை மத்திய அரசு அளித்த பிறகும், மாநில அரசு விவசாயிகளுக்கு வழங்கவில்லை. சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கும் போது ஸ்டாலின் முறையாக நடந்திருந்தால் பழனிச்சாமியால் முதல்வராகி இருக்க முடியாது. போராட்டத்தில் மாணவர்கள் கலந்த கொள்ள வேண்டும் என அழைப்பு விடுப்பது வேதனை அளிக்கிறது.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top