சவுதி மன்னரின் 'காஸ்ட்லி' பயணம்

kastli, saudhi prince, travelling, world
ஜகர்த்தா : சவுதி மன்னர் சல்மான், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்தோனேஷியா செல்ல உள்ளார். பொருளாதார ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக அவர் இந்தோ
னேஷியா செல்ல உள்ளார்.

கண்ணை கட்டும் காஸ்ட்லி பயணம் :

சவுதி மன்னருடன் 10 அமைச்சர்கள், 25 இளவரசர்கள், 100 பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட 1000 பேர் பல தனி விமானங்கள் மூலம் இந்தோனேஷியா வர உள்ளனர். அத்துடன் மன்னர் பயன்படுத்தும் 2 மெர்சிடஸ் பென்ஸ் கார்கள், 2 எஸ்கலேட்டர்கள் உள்ளிட்ட 460 டன் எடையுடைய பொருட்களும் எடுத்து வரப்பட உள்ளன. விமானத்தில் இருந்து கீழே இறங்கும் போது, எஸ்கலேட்டரை பயன்படுத்த சவுதி மன்னர் திட்டமிட்டுள்ளார்.
சவுதி மன்னர், இந்தோனேஷிய தலைவர்களை சந்திக்க உள்ளார். தொடர்ந்து நாளை அந்நாட்டு பார்லி.,யிலும் சவுதி மன்னர் சல்மான் உரையாற்ற உள்ளார். சவுதி மன்னர், தனது இந்தோனேஷிய பயணத்தை முடித்துக் கொண்டு பாலி தீவு, ஜப்பான், சீனா, மலேசியா, மாலத்தீவு உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top