சட்டசபை நிகழ்வு : கவர்னரிடம் அறிக்கை தாக்கல்
assembly committee, chennai, governor, tamil nadu, vidhyasagar rao February 21, 2017,
சென்னை : தமிழக சட்டசபையில் பிப்ரவரி 18 ம் தேதி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது திமுக எம்.எல்.ஏ.,க்கள் தாக்கப்பட்டதாக ஸ்டாலினும், சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் புகார் அளித்தனர்.
அறிக்கை தாக்கல் :
இதனையடுத்து சட்டசபை நிகழ்வுகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கவர்னர், சட்டசபை செயலாளருக்கு உத்தரவிட்டார். இது குறித்து இன்று காலை தலைமை செயலகத்தில் சபாநாயகர், துணை சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் சட்டசபை நிகழ்வுகள் குறித்த அறிக்கையை சட்டசபை செயலாளர் ஜமாலுதீன், கவர்னர் மாளிகையில் நேரில் அளித்தார். சட்டசபை நிகழ்வுகள் குறித்த வீடியோவும் கவர்னர் மாளிகையில் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கவர்னர் மும்பை சென்றுள்ளதால், அறிக்கை அளிக்கப்பட்டது தொடர்பாக கவர்னருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.