காஷ்மீரில் 50 நாட்களில் 22 பயங்கரவாதிகள் பலி

India, india-pakistan, indian army, jammu kashmir
ஜம்மு : காஷ்மீரின் எல்லைப் பகுதியில் கடந்த 50 நாட்களில் நடந்த தாக்குதல் சம்பவங்களில் 22 பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர்.

அதிகரிக்கும் தாக்குதல்கள் :

பயங்கரவாதிகளுக்கும், ராணுவ படையினருக்கும் இடையே அவ்வப்போது தாக்குதல் நடந்து வருகிறது. இதில் 50 நாட்களில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டுக்கு பின் சமீபத்திய தாக்குதல்களில் தான் அதிக அளவில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதே சமயம் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 26 வீரர்கள் இதுவரை இறந்து உள்ளனர். இதில் பாதுகாப்பு பணியின்போது பனிச்சரிவில் சிக்கி அதிகாரி உள்பட 20 வீரர்கள் உயிரிழந்ததும் அடங்கும்.
ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்ஹான் வானி கடந்த ஆண்டு கொல்லப்பட்டதையடுத்து 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்து உள்ளதாகவும், இதன் காரணமாக தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாகவும் உளவுத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top