இன்று முதல் வாரத்திற்கு ரூ.50,000 எடுக்கலாம்
bank notes, India, New delhi, Reserve bank of india February 21, 2017,புதுடில்லி : வங்கி சேமிப்பு கணக்குகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை சமீபத்தில் ரிசர்வ் வங்கி மேலும் தளர்த்தியது. வாரத்திற்கு ரூ.50,000 வரை எடுக்கலாம் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
பிப்ரவரி 8 ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பிப்ரவரி 20-ம் தேதியிலிருந்து ஒரு வாரத்திற்கு பணம் எடுப்பதற்கான அளவு ரூ.50,000 ஆக உயர்த்தப்படும். மார்ச் 13 ம் தேதி முதல் சேமிப்பு கணக்கில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கப்படும் என கூறி இருந்தது. இதனையடுத்து இன்று முதல் வங்கிகளில் வாரத்திற்கு ரூ.50,000 வரை பணம் எடுக்கலாம்.
Source: G-News

Leave a comment
You must be logged in to post a comment.