இது யாருன்னு தெரிகிறதா..? கட்ஜு சொல்லாதது புரிகிறதா?

former justice markandeya katju, India, New delhi, supreme court
நாட்டு நடப்பு, அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமூக அவலங்கள் குறித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, தன் டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து, அதிரடியான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

அவரது, ‘லேட்டஸ்ட் பேஸ்புக்’ பதிவில், ஆள், பெயர் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், அதை புரிந்து கொள்வதற்கு, மூளையை போட்டு கசக்க வேண்டியதில்லை.

பச்சை குழந்தைக்கும் கூட புரியும் வகையில், கட்ஜு பதிவிட்ட முகநுால் பதிவு:

அமெரிக்காவில், சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ஜெயிலுக்கு அனுப்பப்படும், ‘காட் பாதர்’கள் அங்கிருந்தே, தங்களது வேலைகளை செய்வது வழக்கம். அதேபோன்ற ஒரு விஷயம், தற்போது இந்தியாவிலும் எங்கேயோ நடந்து வருவது போல தோன்றுகிறது. இவ்வாறு கட்ஜு குறிப்பிட்டுள்ளார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top