சட்டசபையில் ரகசிய ஓட்டெடுப்பு: ஓ.பி.எஸ்., அணியினர் கோரிக்கை
chennai, minister edappadi palanisamy, MLA, tamil nadu February 17, 2017,
சென்னை: முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நாளை நடைபெற உள்ள நிலையில், சபாநாயகர் தனபாலுடன், ஓ.பி.எஸ்., அணியினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இவர்களுடன் எம்.எல்.ஏ.,க்கள் சண்முகநாதன், மாணிக்கம், ஆகியோரும் சென்றனர்.ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மாபா. பாண்டியராஜன், பொன்னையன், செம்மலை ஆகியோர் சந்தித்தனர்.அப்போது அவர்கள், நாளை ரகசிய நம்பிக்கை ஓட்டெடுப்பு முறையை கடைபிடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது கோரிக்கை மனு ஒன்றையும் அளித்ததாக தெரிகிறது.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.