எப்போதுமே செயல்படாத அதிமுக அரசு: கனிமொழி குற்றச்சாட்டு
ALADMK, chennai, kanimozhi, tamil nadu February 17, 2017,
சென்னை:தமழக அரசியல் சூழ்நிலை குறித்து தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: நம்பிக்கை ஓட்டெடுப்பில் திமுக தலையிடாது.
சரியில்லை:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை. இது பற்றி பேசவில்லை. ஜெ.,ஆட்சியில் கூட பெரிய திட்டங்கள் கொண்டு வரவில்லை. அரசு செயல்படவில்லை. அரசு செயலிழந்த நிலையில் உள்ளது. அது பற்றி யாரும் பேசவில்லை. எப்போதும் அதிமுக அரசு செயல்படாத அரசு தான். நீட் தேர்வு பற்றி தமிழகத்தின் நிலை பற்றி என்னவென்றே தெரியவில்லை. ஸ்டாலின் மட்டும் தான் இதுபற்றி பேசி வருகிறார்.
மக்கள் தெளிவு:
மீண்டும் தேர்தல் வந்தால், யார் வேண்டாம் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். யார் வந்தால் வாழ்க்கை மாறும் என தெளிவாக உள்ளனர். அது திமுக என்பதை புரிந்து கொண்டுள்ளார். மக்கள் திமுகவை ஆதரிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.