15 நாட்கள் அவகாசம் ஏன் ? குதிரை பேரம் நடக்கும் : ஸ்டாலின்

chennai, dmk, minister edappadi palanisamy, MK stalin, tamil nadu
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என எதிர்கட்சி தலைவர் மு.க., ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

தி.மு.க., வரவேற்பு:

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக குழப்பமான நிலை இருந்தது, உடனடியாக ஆட்சி அமைய திமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கவர்னரை சந்தித்தும் எடுத்து கூறியிருந்தோம். கவர்னர் அறிவிப்பு காலம் கடந்து வெளியிட்டாலும் உள்ளபடியே வரவேற்கத்தக்கது.

15 நாட்களுக்குள் என்பது பெரிய அவகாசம், இது ஏன் என்பது எனக்கு தெரியவில்லை . இதற்குள் பல குதிரை பேரங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு ஏதும் நடக்காமல் கவர்னர் பார்த்து கொள்ள வேண்டும். கவர்னர் ஜனநாயகத்தை காப்பார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

English Summary:

Chennai: Edappadi Palanichany call the governor to form the government as the opposition leader welcomed MK Stalin said. In this regard, he added

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top