ஜெ., சமாதியில் நிறுத்தப்பட்ட ‛அம்மா..' பாடல்

chennai, cm, jayalalitha, tamil nadu
சென்னை: மறைந்த முதல்வர், ஜெயலலிதா சமாதியில் ஒலித்துக் கொண்டிருந்த ‛வானமே இடிந்தது அம்மா..’ என்ற பாடல் நிறுத்தப்பட்டதுடன், சில நாட்களாக பராமரிப்பும் நடைபெறவில்லை.

பராமரிப்பு இல்லை:

சென்னை, மெரினா கடற்கரையில், எம்.ஜி.ஆர்., நினைவிடம் உள்ளது. இதில் ஒரு பகுதியில், ஜெயலலிதா உடல், நல்லடக்கம் செய்யப் பட்டுள்ளது. ஜெ., சமாதியை கட்சி நிர்வாகிகள், தினமும் பூக்களால் அலங்கரித்து, பராமரிப்பது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக எந்த பராமரிப்பும் நடைபெறவில்லை. சமாதியை காண வரும் தொண்டர்கள் கொண்டு வரும் பூ மட்டுமே தூவப்படுகின்றது.

பாடல் நிறுத்தம்:

மேலும், ஜெ., சமாதியில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் ‛வானமே இடிந்தது அம்மா… வாழ்வே முடிந்தது அம்மா…’ என்ற பாடலும் நிறுத்தப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English Summary:

Chennai: The late Chief Minister Jayalalithaa, who ring in the grave, “the sky is the mother collapses .. The song stopped, and maintenance has not been done for a few days.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top