எண்ணூரில் முதல்வர் பன்னீர் செல்வம் ஆய்வு…
Uncategorized February 5, 2017,
எண்ணூரில் எண்ணெய் படலம் அகற்றும் பணியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்டோரும் இருந்தனர். கடலோர காவல்படை ஏடிஜிபி சைலேந்திர பாபுவும் உடனிருந்தார்.
அதற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், 'மத்திய அரசுடன் இணைந்து எண்ணெய் படலத்தை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் 1800 பேர் ஈடுபட்டுள்ளனர். எண்ணெய் படலத்தை அகற்றுவதில் 95 சதவிகித பணிகள் முடிந்துவிட்டது. இந்த விபத்தினால் மீன்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.' என்று தெரிவித்தார்.
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.