மகள் திருமணத்துக்காக பரோல் கேட்கும் நளினி!
Uncategorized February 4, 2017,
தனது மகள் திருமணத்துக்காக பரோல் கேட்டு வேலூர் சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் நளினி மனு அளித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நளினி. இவரது கணவர் முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு தந்தை சங்கரநாராயணன் மறைவால் நளினி பரோலில் வந்தார். முருகன்- நளினி தம்பதிக்கு ஹரித்ரா என்ற பெண் இருக்கிறார். இவர் லண்டனில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஹரித்ரா திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்தில் கலந்து கொள்ள பரோல் கேட்டு நளினி, வேலூர் சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளார்.
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.