சென்னை கடலை பாழாக்கிய இரண்டு கப்பல்கள் சிறைபிடிப்பு
Uncategorized February 3, 2017,_நேற_15435.jpg)
சென்னை எண்ணூர் அருகே, விபத்துக்குள்ளான 2 கப்பல்களை இந்திய கடலோர பாதுகாப்புப்படை சிறைபிடித்துள்ளது.
எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே, கடந்த வாரம் 28-ம் தேதி மும்பையில் இருந்து டீசல் ஏற்றிக் கொண்டு எண்ணூரை நோக்கி வந்த டான் காஞ்சிபுரம் என்ற கப்பல் மீது ஈரான் கப்பல் மோதியது. இதில் மும்பையில் இருந்து டீசலை ஏற்றிக் கொண்டு வந்த கப்பல் சேதமடைந்து, கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இந்த விபத்து காரணமாக, கடலில் கொட்டிய கச்சா எண்ணெய், எண்ணூர் முதல் திருவான்மியூர் கடல் பகுதி வரை பரவியது. இதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன. இதனைத்தொடர்ந்து, கடலில் கலந்துள்ள எண்ணெய்யை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விபத்துக்குள்ளான இரண்டு கப்பல்களையும் சிறைப்பிடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, விபத்துக்குள்ளான இரண்டு கப்பல்களையும் இந்திய கடலோர பாதுகாப்புப்படை இன்று சிறைபிடித்தது.
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.