எனது சொந்தப் பணத்தில் உதவுவேன்! மு.க.ஸ்டாலின் உறுதி

எனது சொந்தப் பணத்தில் உதவுவேன்! மு.க.ஸ்டாலின் உறுதி

Uncategorized

தொகுதி நிதியில் இருந்து செய்ய முடியவில்லையெனில் எனது சொந்தப் பணத்தில் இருந்து உதவுவேன் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொளத்தூரில் புயலால் சேதமடைந்த மரங்களுக்கு பதில் புதிய மரக்கன்று நடும் பணி தொடங்கியுள்ளது என்றார்.

கொளத்தூர் தொகுதியில் இரண்டு நடுநிலை, ஒரு உயர் நிலைப்பள்ளிகளை ஆய்வு செய்தேன் என்று கூறிய மு.க.ஸ்டாலின், கூடுதல் வகுப்பறைகள், கழிவறைகள் உள்ளிட்ட வசதி செய்து தர வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்றும், தொகுதி நிதியில் இருந்து செய்ய முடியவில்லையெனில் எனது சொந்தப் பணத்தில் இருந்து உதவுவேன் என்றும் உறுதி அளித்தார்.

கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், குஜராத்தில் எய்ம்ஸ் அமைப்பதன் மூலம் சுயநல நோக்கத்தில் மோடி பட்ஜெட் தயாரித்துள்ளார் என குற்றம்சாட்டினார்.

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top