பதற்றமோ; பயமோ வேண்டாம்! சொல்கிறார் அமைச்சர்

Uncategorized

பன்றிக் காய்ச்சலுக்கு பதற்றமோ, பயமோ தேவையில்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளனர். சேலம் அய்யம்பட்டியில் நேற்று ஒன்றரை வயது குழந்தை ஒன்று பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தது. இதனால், அந்தப் பகுதி மக்கள் பீதியில் வீட்டைவிட்டு வெளியேறி, உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றனர்.

இந்த நிலையில், பன்றிக் காய்ச்சலுக்கு பதற்றமோ, பயமோ தேவையில்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும், பன்றிக் காய்ச்சலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top