"உண்மையை மறைக்கின்றனர்" – கனிமொழி எம்.பி.

"உண்மையை மறைக்கின்றனர்" – கனிமொழி எம்.பி.

Uncategorized

கடலில் கொட்டப்பட்ட எண்ணெய்ப் பிரச்னையைத் தீர்க்க முயல்வதை விட உண்மைகளை மறைப்பதிலேயே தமிழக அரசு அதிகாரிகள் அதிக கவனம் செலுத்துகின்றனர் என திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள கனிமொழி, "சென்னையை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கப்பல்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு, கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டதாகவே தெரிகிறது. தொடர்புடைய துறை அதிகாரிகள் உண்மையை மூடிமறைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இதனால், கடலோர மக்களின் அன்றாட வாழ்வே அச்சத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

கடலோரத்தில் எண்ணெய்க் கசிவுகள் படிந்த ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன. எண்ணூர், காசிமேடு கடலோரப் பகுதிகள் எண்ணெய்ப் படலத்தால் மூடப்பட்டுள்ளன. இத்தகைய பிரச்னைகளை ஒரே இரவில் தீர்த்துவிட இயலாதுதான். ஆனால், அரசுத்துறை அதிகாரிகள், பிரச்னையைத் தீர்க்க முயல்வதைவிட உண்மைகளை மறைப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர்" என்று கூறியுள்ளார்.

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top